சமீபத்திய நிகழ்வான இந்த புகைப்படத்தை
 ( http://bit.ly/16RWTjx )
மேற்கோள் காட்டி
எவராகிலும் ஒருவர்,
மொத்த காவல் துறையும் இப்படிப்பட்டதே என சொல்வாராகில்
அவரின் அறியாமை குறித்து நாமெல்லாம் வியாக்கியானம் சொல்ல ஆரம்பிப்போம்.!

ஆனால் அறிவு ஜீவிகள் என அறியப்படும்
முகநூல் பிரபலங்கள் பலர் ,
தங்கள் சார்பான கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் எண்ணத்துடன்,
மற்றவர் குறித்து குறை சொல்ல
மேற்கோளுக்கு எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகள்
மிகவும் வேடிக்கையானது.
அறியாமை மிகுந்தது.

சமீபத்திய வினோதம் :
குளிர் சாதனக் கருவியை பெண்கள் உபயோப்பது
குறித்து எவரோ இட்ட ட்விட்டேர் பதிவும் ,
அதை முகநூல் அறிவுஜீவிகள் விவாதிக்கும் முறையும்.!

(https://www.facebook.com/JuniorVikatan) & Etc...


பேஸ்புக்கில் போராடிக் கொண்டு இருக்கும்
சக கருத்துப் போராளிகளில் ஒருவரா நீங்கள்.?
ஆம் எனில் இதை படியுங்க.!

பொது விவகாரங்களைக் குறித்தும் ,
அதனோடு சம்பந்தப்பட்ட நபர்களைக் குறித்தும்,
அனல் பறக்க கருத்து சொல்ல,
பேஸ்புக் மூலம் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் போது,
நம்மில் பலர் கொஞ்சம் ரொம்பத்தான்
அப்பாடக்கராக மாறி விடுகிறோம்.
(விதிவிலக்காய் சிலரும் உண்டு. )








கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில்,
நம்முடைய அனுபவ அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டு,
வேறு எதுவும் இல்லை என நாம் நினைத்தால்
அது நம்முடைய அறியாமையே அன்றி வேறில்லை.(என்பது என் பணிவான கருத்து )

நம் பதிவுக்கு எதிராக
மாற்றுக் கருத்து சொல்லும் அனைவரையும் உடனடியாக
எதிரிகள் பட்டியலில் சேர்த்து விடுகிறோமா.?

உண்மையே நம்முடைய மனதில் சமூக அக்கறை உள்ளதா.?
அல்லது
நமது கதாகாலட்சேபங்களை நாம் சுய விளம்பரம் செய்கிறோமா.?
அதுதான் நமது முக்கிய இலக்காக உள்ளதா.?

நம்மை நாம் பரிசோதனை செய்து கொள்வோம்.
கொஞ்சம் நாம் யோசிக்கணும்.!

ஆரம்பத்தில் சக மனிதன் மீது உள்ள பரிவின் காரணமாக;
சமூக அவலங்கள் மீது ஏற்படும் கோபம் காரணமாக
எழுத ஆரம்பிக்கும்
நம்மில் பலரின் இதயங்கள்,
காலப்போக்கில்
விளம்பர வியாதிக்கு அடிமையாகி விடும்
ஆபத்தை எதிர் கொள்ள நேர்கிறது.

நம்மை;
நாம் சொல்லும் கருத்தை;
பிரதானப்படுத்த
நாம் எப்போது அதீத முயற்சி கொண்டு செயல்பட முற்படுகிறோமோ
அன்று நம் சமூக அக்கறையின் மீது
முதல் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.

நாம் சுய புராணங்களுக்கு,
நம்மை குறித்து சொல்லப்படும் புகழ் மொழிகளுக்கு கிடைக்கும்
லைக்குகளும் சேர்களும் நம்மை புளகாங்கிதம் அடைய செய்யும் போது
நம் சமூக அக்கறையின் மீது இரண்டாம் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.


மற்றவர் குறித்த விவாகரங்களை,
நாம் நினைத்தபடி எழுதும் போது நமக்கு ஏறபடும் ஆர்வ மிகுதி ,
நம்மைக் குறித்து எவராகிலும் விமர்சனம் செய்யும் போது எரிச்சலாய் மாறுகிறது எனில்
நம் சமூக அக்கறையின் மீது மூன்றாம் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.

என்ன சார்.!
நம்ம இவை அனைத்தையும் கடந்து,
இவற்றின் எந்த வலையிலும் சிக்காமல்
இன்னும் உயிர் துடிப்போடு தான் இருக்கிறதா
நம் சமூக அக்கறை.?

ஆம் எனில் நல்லது.
அப்படியே தொடர்வோம்.!

எதோ தோன்றியது சொன்னேன்.
அவ்வளவே.!

நமது கசடுகளை அகற்றி,
நம் மனதும், முயற்சியும் தூய்மைப்பட்டால்
எல்லோருக்கும் நல்லது தானே!

- Abbas Al Azadi



தாகம் உள்ளோர் நீர் அருந்தலாம்..

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் இந்த படத்தை பதிந்து,
பாருங்கள் பங்களாதேஷ் நாட்டில் ஹிந்துக்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என வருத்தப்பட்டு இருந்தார். அவரோடு நண்பர்கள் சிலரும் ஆதங்கப்பட்டார்கள்.

http://www.hindurashtra.org/muslims-beating-hindu.jpg

அடிப்பது தொப்பி போட்ட நபர்கள். எனவே அடி வாங்குவது கண்டிப்பாக ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முன் முடிவிலோ அறியாமையிலோ, அல்லது தவறான எண்ணத்துடனோ பதிவிட்ட அந்த நண்பர்களுக்கான(அப்படி இருக்காது என நம்புகிறேன் ) விளக்கம் இதோ.!

தாகம் உள்ளோர் நீர் அருந்தலாம்.

தவறான செய்தியை பரப்புவோர் எப்படி அபயாகரமானவர்களோ, அதைப் போலவே ஆராயாமல் எதையும் நம்புவர்களும் சற்றே ஆபத்தானவர்களே.!

எந்த ஒரு கூட்டத்தார மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை நீதியில் இருந்து உங்களை பிரழ செய்து விட வேண்டாம்

பங்களாதேஷ் குறித்து இணையத்தில் இது போன்ற ஏரளாமான புகைப்படங்கள் தவறான பொய் பிரச்சாரங்களோடு காணக்கிடக்கிறது.







In Picture: Graduating from Weill Cornell Medical College in Qatar (WCMC-Q), 20-year-old Iqbal El-Assaad is possibly the youngest Arab doctor ever.

Iqbal El-Assaad is the youngest medical doctor to graduate from Weill Cornell Medical College in Qatar (WCMC-Q) in its ten-year history. When Iqbal was a toddler, she learnt algebra by watching her older siblings study. Before El-Assaad's fifth birthday, her favourite pastimes were reading books and solving mathematical problems.

Following her graduation, Nature Middle East spoke to Iqbal about what it's like to be a 20-year old medical doctor and hear what she plans for the future.

Who or what inspired you to pursue a career in medicine?

I made the decision to be a doctor myself when I was 12 years old. Growing up as a Palestinian living in Lebanon, I saw much suffering among my people since the Palestinians in Lebanon did not have health insurance.

நான் முத்தி உர் ரஹ்மான் சித்திக்.
விசாரணைக்குப் பின் என்னை நிரபராதி என சொல்லுகிறது NIA(National Investigation Agency) .
- நன்றிகள் அவர்களுக்கு உரித்தாகட்டும்...

பொதுப்புத்தியில் முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்கிற விஷத்தை விஷக் கருத்தை ஆழமாக ஊன்றி வருகிறார்கள்.
அதன் பாதிப்பே அப்பாவியான என்னை கைது செய்தது.!

தீவிரவாதிகளின் முக்கிய மூளையாக என்ன சித்தரித்தன காவல் துறையும் , ஊடகங்களும்,.

என் பெயரைக் கேட்டவுடனே என்னைக் கைது செய்வதில் முனைப்பும், ஆர்வமும் காட்டிய காவல் துறை அதிகாரிகள் வாழ்க.!

பத்திரிக்கையாளாக இருந்தும், எனக்காக குரல் எடுப்பக் கூட பயந்தவர்களாக இருந்தார்கள்
பொதுப்புத்தியில் பாதிக்கப்பட்டு போன என சக ஊடகவியலாளர்கள்.!

வாழ்க ஜனநாயகம். – வாழ்க விஷப் பிரச்சாரம் – வாழ்க
முன்முடிவுகள்.

விசாரணைக் கைதியாகவே எங்கள் இளமை கழிந்து விடும் அபாயத்தில் இருந்து இறைவன் எங்களை காத்துள்ளான்.
எங்கள் வழக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.,

இன்று நான் நிரபராதி என சொல்லும் போது, எந்த ஊடகத்தையும் காணோம்.
எந்த தலைப்பு செய்தியிலும் என பெயர் இல்லை.
இது ப்ரேகிங் நியூஸ் இல்லையோ.!

http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/i-was-a-victim-of-prejudice-by-security-agencies:-muthiur-rahman?redirect=%2Fweb%2Fguest%2Fhome

http://www.coastaldigest.com/index.php/news/51143-release-muthi-ur-rahman-immediately-nia-court



நம்முடைய தேசம் பன்முக கலாச்சாரத்தைக் கொண்ட சிறந்த ஒரு தேசம்.

தொடர்படியான மத மோதல்கள், கொலைகள், தாக்குதல்கள், வன்முறைகள் என தேசம் கடந்து வந்த இருண்ட பக்கங்கள் சிலவற்றின் வரலாற்று சுவடுகளை நாம் அறிவோம்.

இதற்கான காரணகர்த்தாக்கள் யார்.? பலியாடுகள் யார் என்பதயும் நாம் நன்கறிவோம்.!

இந்த நாட்டில் வாழும் நல்ல உள்ளம் உண்ட சமூக நல்லிணக்கவாதிகள், சமூகப் போராளிகள், நல்ல தலைவர்கள், பொதுமக்களின் தொடர்படியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக நம்முடைய தேசம்
பல இனம், மத, மொழியுடன் கலந்து,
பன்மைச் சமூகக் கலாச்சாரத்தைக் கொண்டு வீறு நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதோ இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வர இருக்கிறது.
சில மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.
அடி வயிற்றில் சற்றே பயம் புரட்டுகிறது.

வன்முறை, மதவாத , கலவர அரசியல் நடத்தியே பழக்கப்பட்டு இருக்கிற சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு பொதுமக்களும், இளைய சமுதாயமும் பலியாகி விடக்கூடாது என்கிற உணர்வு மனதில் ஆர்ப்பரிக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக மக்களை
மத, மொழி, இன ரீதியாக பிரித்து, வன்முறைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி,
அதன் மூலம் சுய லாபத்தை அடைய;
வோட்டுக்களைப் பெற
நம் நாட்டில் கட்சிகள் சில தயாராக உள்ளன.

தேசத்தில் எதோ ஒரு மூலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உடனடியாக மீடியாவும், அரசும் தரும் செய்திகளை அப்படியே நம்பி விடாமல், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சற்றே நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறில்லையேல் அவசரத்தின் காரணமாக ஊகங்களையும், வீண் புரளிகளையும் பரப்பி அதன் மூலம்,
நாமே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து விட நேரிடலாம்.

தேவை அதிக எச்சரிக்கை.!

ஏன் இவை நடக்கிறது.,?
இவற்றை எப்படி அணுகுவது.?
இதன் மூலம் பலனடையப் போவது யார் என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்தால்,
நம்முடைய செயல்பாடுகளை நாம் சற்றே விவேகத்தோடு அமைத்துக் கொள்வோம்.

அவ்வாறில்லாமல் வெறும் வெற்று கோபத்தோடும், ஆவேசத்தோடும் மட்டுமே நம் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டோமென்றால் நமக்கு நாமே கேட்டையும், இழிவையும் தேடிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டு விடும்.
எந்த ஒரு சமூகமும் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளாவிடில் ,
தவறுகள் திரும்ப நடப்பதை எவராலும் தடுக்க முடியாது.
இறைவன் நம்மை பாதுகாப்பானாக.!

நம்முடைய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புவோர்
அதற்கான வாய்ப்பு கிடைக்காதா என காத்துக் கொண்டு இருக்கும் வேளையில்;
வேண்டும் என்றே சில விரும்பத்தகாத நிகழ்வுகளை அரங்கேற்றும் வேளையில்;
நம்முடைய இளைஞர்கள் சிலரும் அறியாமை மற்றும் ஆவேசத்தின் காரணமாக அந்த சதிக்கு பலியாகி விடுகின்றனர்.

நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நாம் செய்யும் நடவடிக்கைகள்,
பொது மக்களுக்கு தொல்லைகளை உண்டாக்கும் வகையிலோ,
பொதுமக்களுக்கு நம் மீது வெறுப்பை அதிகரிக்கும் வகையிலோ அமைந்து விடக்கூடாது.
மாறாக நம்முடைய நியாயமான போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவையும் பெரும் வகையில் நம் அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எதிர் நடவடிக்கைகள், போராட்டங்கள் போன்றவையெல்லாம் கூடாது என்பதல்ல.
மாறாக அவை நமக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் அமைந்திட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் நமக்கெதிரான வெறுப்புணர்வை , நம்முடைய செயல்கள் மூலமாக, நாமே அதிகரித்தால் அது அறிவாளித்தனமா.?

நமக்கெதிராக யாரோ சிலர் பின்னும் சதி வலையின் சிக்கல்களை,
நாமே அதிகப்படுத்தி விடக்கூடாது.

நமக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டி நாம் வன்முறையையோ, சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறையையோ கையில் எடுத்து விடக்கூடாது.

நமது எந்த ஒரு செயலும் வீண் பதட்டத்தையும், அச்சமான சூழலையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

அதனால் எவ்வளவு பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பொது அமைதி பாதிக்கப்படும். மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
பதட்டம் நிலவும்.

எவ்வளவோ நபர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும், பயணங்களும் மருத்துவ சூழலும் கேள்விக்குரியதாக ஆகி விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் உயிர்கள் கூட பலியாகி விட நேரிடலாம்.
சொத்துக்கள் நஷ்டப்படலாம்.

நீதிக்காக எங்கு யாரை , எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுக வேண்டும்.
நியாயம் வேண்டி நாம் மேற்கொள்ளும் நம்முடைய போராட்டங்களை சட்டத்தின் துணை கொண்டு வீரியம் மிக்கதாக ஆக்க வேண்டும்.

பொதுவாக தேர்தல் சமீபத்தில் அணுகி வரும் காலங்களில்,
இது போன்ற பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் வோட்டுகளை பெறுவது என்பது சில அரசியல் கட்சிகளின் தேசிய கொள்கையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட பதட்டமான சூழல்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தான் அவர்கள் தேசிய அளவில் வளர்ச்சி பெற்றார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே.

எனவே மீண்டும் அப்படிப்பட்ட சூழ்நிலைக்காக வேண்டி அவர்கள் காத்து இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
நம் நடவடிக்கைகள், எதிர் நடவடிக்கைகள், போராட்டங்கள் போன்றவற்றில் இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது.!

ஒரு இறை நம்பிக்கையாளன் ஒரே புற்றில் இருந்து இரண்டு முறை குட்டுப்பட(தீண்டப்பட) மாட்டான் அல்லவா. ?

ஆண்டாண்டு காலமாக சுய லாப அரசியலுக்காக சிலர் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சியை நன்கு உணர்ந்து கொண்டு,
அப்படிப்பட்ட சதிச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு வேரோடு களை எடுப்போம்.

அப்படிப்பட்ட சூழ்ச்சிகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கிகளை மேற்கொண்டு சதிகளை முறியடிப்போம்.

சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் நாட்டில் செழித்து ஓங்கட்டும்.

எங்கள் இறைவா எங்கள் தேசத்தை அமைதியும் நீதியும் மிக்கதாக ஆகித்தருவாயாக.!
நல்ல ஆட்சியாளர்களை எங்களுக்கு ஏற்படுத்தி தருவாயாக.!

நாட்டில் எல்லா தரப்பு மக்களும் அவர்களுக்குரிய நீதி, நியாயம் மற்றும் அடிப்படை உரிமைகை பெற்று வாழ அருள் புரிவாயாக.

நல்லோர்களின் இதயங்களை ஒண்றிணைப்பாயாக.!
தீயோர்களின் சதிகளை முறியடிப்பாயாக.!
 

நம்மோடு பழகிய ஒருவர் நற்குணங்களை கொண்டிருக்கவில்லை;
அவரை நமக்கு பிடிக்கவில்லை
என்பதை எல்லாம் காரணமாக சொல்லி,
நாம் அவருக்கு அநீதி இழைக்கின்றோம் என்றால்,
பிறகு நம்மை விட பெரிய அநீதியாளன் வேறு யாராக இருக்க முடியும்?

நம்மோடு இருக்கும் நண்பரின் நிறை குறைகளை,
சம்பந்தப்பட்ட நபரிடம் கூற ,

துணிவும் அக்கறையும் இல்லாமல்,
அந்த நண்பர் மீது அக்கறை இருப்பதாக
வெறுமனே மனதிற்குள் மட்டும்
நம்பிக் கொண்டு இருப்பதில்
என்ன பயன்.?

நண்பரின் துன்பத்திலும், துயரத்திலும்
பங்கு கொள்ள மனம் இல்லாமல்
அவரின் செயல்பாடுகளில்
சரி-தவறுகளை குறித்து பேச
நமக்கு என்ன அருகதை இருக்க முடியும்.?

வியாபாரி இலாப நோக்கிற்காக மட்டுமே உடன் இருப்பான்.
தோழனின் உறவில், கூடவே அன்பும் அக்கறையும் இருக்கும்.

நாம் உறவைப் பேணுவதில் வெறும் வியாபாரியா.?
நல்ல மனம் கொண்ட நண்பனா.?

They are not able to see the right picture with its actual presence, Whoever have a partial/complete blindness.

Because of their blindness, they will depend more whoever holds their hands during a walk in a footpath.

Also they are forced to believe on other's eyes to realize the actual image.
***
The world is also like a footbath. We should check.
Do we not have a blindness in knowledge/understanding.?
***

வெறும் ஆண் பெண் கலப்பினால் மட்டும் குழந்தை உண்டாகி விடுவதில்லை.

ஒரு துளி விந்தணு குழந்தையாக மாற என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கிறது என்பதை அறிந்தால்,
எல்லாம் தானாக நடக்கிறது என்ற எண்ணத்தை தூக்கி எறிந்துவிடுவீர்கள்.

அறிவியல் ரீதியான இந்த விடியோவை பொறுமையாக / முழுமையாக பார்த்தால் , கடவுள் மறுப்பு கொள்கை கட்டாயமாக ஆட்டம் காணும் என்பது உறுதி.!

http://www.youtube.com/watch?v=hbUPdgGa4_E

We Should not always walk on the line which is decided by somebody.

we should not conclude anything based on magics and jimmics.

Sree Shanth and other two players may be a innocent victim.

Because The whole IPL is nothing but a
collection of magics and jimmics for business in the name of cricket.

Becoz Cricket is Having lot of consumers & It is one of the top money making technique in INDIA.

So Lets wait to know more about ongoing IPL Cricket Drama.

We Should not always walk on the line which is decided by somebody.


A young Afghan balloon seller runs towards a customer on a street in Kabul.

காற்றென பறந்து திரிந்து,
சிறகடித்து பறந்த
என் இளம் சிறகுகளில் ,
புயலை நிரப்பி ,
சிறகொடித்து,
சொந்தம்- பந்தம் கூடவே எம்
விடியலையும் பறித்து,
இக்கணம்,
வாழ்க்கை தேவைகளை
தேட
வெறும் காற்று மட்டும்
எங்கள் கரங்களில் மூலதனம்.!

இந்நிலைக்கு எம்மை
தள்ளியவர் யாரோ.?

Abbas Al Azadi




கம்யுனிசம் உலகை உய்விக்க வந்த கோட்பாடா.?
அதிகாரம் கிடைக்கையில் பேயாட்டம் ஆடியவர்கள் தான் அவர்கள்.
அடக்கி ஒடுக்குதலும் , புரட்சி என்கிற பெயரில் கொலைகளும்
இன்னும் தொடரத்தான் செய்கிறது சிவப்பு(மனிதர்)களிடம்.!!

Anything that is outside of state-controlled religion is viewed by the Chinese government as illegal religious activity – and anything viewed as illegal religious activity is in turn associated with terrorism." -@aSmileInTheMind

நல்ல உள்ளம் கொண்ட சிலர் இருப்பதால்,
அவர்களின் இயல்பான குணத்தின் காரணமாக
மக்கள் சேவைக்கென குரல் கொடுக்கிறார்கள்

மற்றபடி கம்யுனிசத்தின் மக்களை இட்டு செல்லும் இலக்கு 
அவர்களுக்கு பிடித்த சிவப்பே!(இரத்தமே.!)

இதற்கு வரலாறே சாட்சி.!
http://www.guardian.co.uk/world/2013/apr/24/chinese-gangsters-police-shootout








 

சில வேளைகளில் சில முட்டாள் தனமான விசயங்களை பத்வா என்ற பெயரில் சிலர் வெளியிடுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நபர் அப்படி சொல்லி இருந்தால் அது முட்டாள் தனமானது. அறிவீனம்.

அதே வேளையில் செய்தி உண்மையோ அல்லது பொய்யோ ,
எவற்றையும் ஆராயாமல் ,
அதை இஸ்லாம் குறித்து களங்கத்தை பரப்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள். செய்தியின் உண்மைத் தன்மை அல்லது பின்புலம் என எது பற்றியும் யோசிக்காமல், சடசடவென பரப்புகிறார்கள் அறிவு ஜீவிகள்(..!) சிலர்.

அதே வேளையில்,பல நேரங்களில், வேறு மொழிகளில் சொல்லப்படும் சில விளக்கங்களை, ஒழுங்கா (அரபியை/அல்லது சம்பந்தப்பட்ட மொழியை ) மொழி பெயர்க்க தெரியாத
அறிவு ஜீவிகள் அவசரப்பட்டோ, அல்லது வேண்டும் என்றோ செய்தியை தவறாக மொழி பெயர்த்து வெளியிடுவார்கள்.

பின் அது உலகெங்கும் பரவும்., சில நாட்களுக்கு பின்,தவறாக மொழி பெயர்த்தி விட்டோம். தவறுக்கு வருந்துகிறோம் என பின்னொரு நாளில் செய்தி வெளியிடும்.

இதனிடையே செய்தியை பரப்பிய கருத்து அறிவு ஜீவிகள் தங்கள் அவசரத்திற்காக வருத்தம் கூட தெரிவிக்க மாட்டார்கள். (சில கண்ணியவான்கள் மட்டுமே விதிவிலக்கு. )

மீண்டும் சொல்கிறேன்.
சம்பந்தப்பட்ட நபர் அப்படி சொல்லி இருந்தால் அது முட்டாள் தனமானது. அறிவீனம்.

எவராகினும் செயல்படும் முன் , எதையும் பரப்பும் முன் சற்று சிந்தித்தல் நலம்.

( எகிப்தில் சிறுபான்மையினர் சிலருக்கு அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்க அனுமதி இல்லை என எகிப்தின் அமைச்சர் ஒருவர் சொன்னதாக தவறாக செய்தி வெளியிட்டனர். )

(சமீபத்தில் சவூதி மத அறிஞர் கூறிய வார்த்தை ஒன்றை தவறாக மொழி பெயர்த்து, அவர் சிரியாவின் பெண்களை கூட்டாக கற்பழிக்க தூண்டுகிறார் என தவறான செய்தியை விஷமாய் பரப்பி, பின் தன தவறுக்கு வருந்திய இணைய தளம் வெளியிட்ட செய்தியின் படம் இங்கே கீழே இணைக்கபட்டு உள்ளது. )


Why they are propagating false news's on Islam.?
Its recent example.
one website published the news. its claims, saudi cleric call to rape syrian women. **Astaghfirullah. **
Later the same website published an apology for his wrong Arabictranslation and false news.
*********************
Recent News is :
Even BABIES must wear the burka': Saudi cleric says newborn girls should have their faces veiled to help ward off sex attacks

Read more: http://www.dailymail.co.uk/news/article-2273308/Sheikh-Abdullah-Daoud-Saudi-cleric-sparks-outrage-calling-baby-girls-wear-burka.html#ixzz2K2aGEh8X

Lets Wait and see what he said in real.

They are prefer to drink alcohol to forget their worries.
Later they will worry for lack of money to drink the same alcohol.

They prefer to drink alcohol to forget their pains. Later they will suffer with more pains becasuse of their alcoholic consumptions.

They prefer to drink alcohol to celebrate life.
Later they will loss every joy of life because of their alcoholism.

Drinking Alcohol is not a solution to anythink.
Its nothing but a disease and addiction.

(Via Anna Kannan)

புதிதாக ஒரு விவகாரம் வந்தால் பழைய விவகாரத்தை அப்படியே மறந்து விடுவது நம் அனைவரின் பலவீனங்களில் ஒன்று.
ஆட்சியாளர்களும், நமது இப்படிப்பட்ட பலவீனங்களை பயன்படுத்திக் கொள்பவர்களும் நம்மை குறித்து நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். எனவே தான் புதிதுபுதிதாக விவகாரத்தை உருவாக்கி நம்மை பழைய விவகாரங்களில் இருந்து நம் கவனத்தை திறமையாக திசை திருப்பி விடுகிறார்கள்.

அனைத்து விவகாரங்களில் பெரும்பாலும் அடிப்படை ஒன்றுதானே.
தேவை நமக்கு சற்றே அகண்ட பார்வை.

நடப்பு செய்தியை வெறும் நேரப் போக்கிற்காக விவாதிக்கும் மக்களாக நாம் இருந்து விடக்கூடாது. நம்மிடம் உள்ள அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி அதன் மூலம் வெறும் புகழையும், பாராட்டையும் பெறுவதை நம் முக்கிய நோக்கமாக கொண்டு நம் முயற்சிகள் அமைந்து விடக்கூடாது.
எல்லா விவகாரங்களை குறித்தும் ஒரே நேரத்தில் எவரால் பேச முடியாது.
அதற்கான வேலை வரும் போது தான் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து அதிகம் பேசவும், விவாதிக்கவும் முடியும்.

நாம் எதற்காக பல்வேறு விசயங்களைக் குறித்தும், விவகாரங்களைக் குறித்தும் பேசுகிறோம், விவாதிக்கிறோம் என்கிற அடிப்படை இலக்கு குறித்து நாம் தெளிவாக இருந்தால், செய்தி மாற மாற நம் விவாதங்களும் முற்றிலும் மாறும் சூழல் வராது. அது இலக்கை நோக்கி அது கம்பீரமாக நடைபோடும்.

Oh Online Activists.!
We are like a Social Doctors.
May be We have our own choices and priorities.
But it should not reflect in our prescriptions to the society.
We should prescribe things to the society whichever is necessary at now with priority.
The Good Doctor will prescribe medicine after propper analysis on patient.
The Foolish doctor will do anything.!!

What kind of social doctors we are.??
Powered by Blogger.