கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சற்றும் தேவையற்றது.
A.Narayanan (Paadam magazine)
தோழர்களே,
கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம் இனி சற்றும் தேவையில்லை. எதிர்காலத்தில், சுனாமி, புகம்பம் வந்தோ, அல்லது அணு உலை வெடித்தோ பேரழிவு ஏற்படலாம் என்பது தான் அணுஉலை எதிர்ப்பாளர்களின் அச்சம். அதற்கு இப்பொழுது தேவையே இல்லை.
அதற்கு முன்பே, தமிழகம் சுடுகாடு ஆவதற்கு, புரட்சித் தலைவி, ஒரு புரட்டலான திட்டம் தீட்டிவிட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக, ஏட்டிக்கிப் போட்டி என இலவசத்தை அள்ளி வீசி, வெற்றி பெற்று, இன்றைக்கு தமிழகத்தை நாசமடையச் செய்ய, நலிவுப் பாதைக்கு எடுத்துச்செல்ல துணிந்து விட்டார்.