|
சூதானம் - பத்திரம்
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு - தெரு முடியும் இடம்
வெங்கப்பய - உருப்படாதவன்
சொளகு - முறம்
சோப்ளாங்கி - சோர்ந்து போனவன்
மெனா - பைத்தியம் போல் இருப்பவன்
தளை - கட்டு, கைவிலங்கு
தடாகம் - குளம்
அன்னம் - சாதம்
தொன்மை - பழமை
இலக்கம் - எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்
கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு
சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி
கருக்கல் - மாலை மயங்கிய வேளை
ஆச்சி - அப்பாவின் அம்மா.
இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...
அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...