ஒரு பொருளை கடைகளில் வாங்குவதற்கு முன்பு,
அந்த கடையின் விற்பனையாளரின் விற்பனை தந்திரத்தில் மயங்கி விடாமல் ,
அந்த பொருளில் குறைகள் ஏதாகிலும் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்கிற ரீதியில் யோசித்து ,
கேள்விகள் கேட்டு ,
எதையும் வாங்குவது நல்லது..
ஏனென்றால் பொருளை விற்கும்போது
பல்லிளிக்கும் கடைக்காரர்கள் , வாங்கிய பின் அதில் குறைகள் ஏதாவது ஏற்பட்டு அதற்கான சேவைக்காக வேண்டி, நாம் அணுகும் போது நமக்கான சேவையை அளிக்க கடைக்காரர்கள் தயங்குகிறார்கள்; எரிச்சல் படுகிறார்கள். நேரம் விரையம் ஏற்படுவதாக கூட பல கடைக்காரர்கள் நினைக்கிறார்கள்.
சேவையில் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வியல் நீதி மன்றத்தை அணுக நமக்கு பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை . அதன்
காரணமாகவே இது போன்ற சேவைக் குறைபாடுகள் இன்னும் தொடர்கின்றன.
தேவை இன்னும் அதிக விழிப்புணர்வு