உதவி என நினைத்துக் கொண்டு உபத்திரம் செய்வது தகுமா.?

நம்முடைய அரசும் அதன் அதிகாரிகளும் மக்களுக்கு ஏதாகிலும் பிரச்சனை என்றால் உடனே தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பொறுத்துப் பார்க்கின்ற மக்கள் உடனே செய்வதென்ன.  சாலை மறியல் செய்வது.?


அய்யா மஹா ஜனங்களே.! நமது பிரச்சனை தீர்க்க நாம் சாலை மறியல் செய்கிறோம். போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. காத்திருக்கும் பயணிகள் எவ்வளவு பேருக்கு, எவ்வளவு இழப்புகள் ஏற்படும். அவர்களும் நம்மைப் போன்ற மக்கள் தானே.!


சாலை மறியல் செய்வதற்கு பதிலாக  , சற்று சிரமம் பார்க்காமல் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தை  முற்றுகை இடுங்கள். எங்கு தேவையோ அங்கே தட்டுங்கள். அதை விட்டு விட்டு சாலை மறியல் செய்வது மற்றும் அதற்காக தூண்டுவதும்,ஒருங்கிணைத்து குளிர் காய்வதும், நம் பகுதி மக்களுக்கு செய்யும் உதவியா.? நம்மை போன்றே மக்களுக்கு நாம் செய்யும் உபத்திரவமா.? இனியேனும் யோசிப்போம்.
Powered by Blogger.