இலவசத்தின் விலை இதுதான்!
- மாலன்

கிடுகிடுவென்று
 ஏறிய பெட்ரோல் விலை கொஞ்சம் இறங்கியதாக வந்த செய்தி உண்மைதானா இல்லைமனப் பிரமையா என்று கொஞ்சம் திகைப்போடுபுன்னகைக்கலாமாஎன அரைத் தயக்கத்தில் இருந்த மக்கள் தலையில் ‘மடேர்’ என வந்திறங்கியது தமிழக அரசின் அணுகுண்டு அறிவிப்பு.

தவிர்க்க முடியாத அன்றாடத் தேவைகளாகி விட்ட பால்போக்குவரத்து இவற்றுக்கான விலை/கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கும்வந்து விட்டனஅடுத்தாற்போல மின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ‘அதிகாரப்பூர்வமற்ற’ அறிவிப்புகள் உணர்த்துகின்றன.
நினைத்து நினைத்துப் பெய்யும் சென்னை மழையைப்போலஅவ்வப்போது ஏறும் பெட்ரோல் விலையோடு இந்த விலை உயர்வுகளையும் சேர்த்துப் பார்த்தால்  ஒருசராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இதுவரை செலவழித்ததை விட அதிகமாகச் செலவழிக்க நேரிடும்அடித்தளமக்களின் வாழ்க்கை அதைவிட அபாயகரமான விளிம்பிற்குச் செல்கிறதுஇதைச் சமாளிக்க அவர்கள் ஒன்றுதங்களது சேமிப்பைக் கைவிட வேண்டும் அல்லது பால்போன்ற ஊட்டச் சத்துக்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.  சென்னையில் வசிக்கும் ஆண்டனி  என்ற தினக்கூலி, "இதுவரைக்கும் பேருந்துக் கட்டணமா மாதம்ஐநூறு ரூபாய்தான் செலவு செய்துக்கிட்டு இருந்தோம்ஆனாஇப்ப அதுவே ஆயிரம் ரூபாய் ஆகிடுச்சிஎல்லா விலையையும் இருமடங்கு ஆக்கிட்டாங்கஎனப்பொருமுகிறார்வசந்தி என்ற குடும்பத்தலைவி (சென்னை), "முன்னாடி பால் விலை ஏறியபொழுது ஒரு லிட்டர் வாங்கிக்கிட்டு இருந்ததை அரை லிட்டரா வாங்கிசமாளிச்சி வந்தோம்இப்ப அரை லிட்டர் கூட வாங்க முடியாத விலை விக்குதுஒரு ரூபாய்ரெண்டு ரூபாய் ஏற்றி இருந்தால் கூட சமாளிச்சி இருப்போம்ஆனா,ஆறுரூபாய் ஏத்துனதுதான் அதிர்ச்சியா இருக்குஎன்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால்தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் பின்னோக்கிச் சறுக்குகிறது.
மற்ற மாநிலங்களில் பால் விலை மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால்அங்கேயும் நிலைமை நமக்கு நிகராகஅல்லது நம்மை விட அதிகமாக இருக்கின்றன (காண்கபெட்டிச் செய்தி).‘காலுக்குச் செருப்பில்லை எனக் கவலைப்படுகிறாயேகாலே இல்லாதவனை நினைத்துப் பார்எனத் தத்துவம் பேசுகிறவர்களுக்கு இது ஆறுதல் தரலாம்.  ஆனால்நடைமுறை வாழ்க்கை நிஜங்கள் நம்மைக் கிள்ளிக்கொண்டே இருக்கும்.  இந்த விலை உயர்வைத்தாண்டிக் கவலைப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

பெட்டிச் செய்தி

http://www.puthiyathalaimurai.com/images/stories/1.gif












http://www.puthiyathalaimurai.com/images/stories/3.gif 



















முதல்வரே அதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்ஆவின்மின்சார வாரியம்போக்குவரத்துக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், ‘மரணப்படுக்கையில்’ இருப்பதாக அவர் கூறுகிறார். "இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால்அவை முற்றிலும்செயலிழந்து போய்விடும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படி நலிந்ததற்குக் காரணம் என்ன?
ஒரே வார்த்தையில் சொன்னால் அலட்சியம்வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக அரசின் நிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக பொறுப்பற்ற முறையில்நிர்வகிக்கப்படுகிறதுஒரு நிறுவனத்திற்கு ஓராண்டு நஷ்டம் ஏற்பட்டால்அதற்கு சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணம் என்று சொல்லலாம்.ஆனால்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வந்தால்அந்த நஷ்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு போனால் அதைப் பொறுப்பற்ற நிர்வாகம்எனச் சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
இதற்கு அடிப்படையாக இரண்டு மனோபாவங்கள் இருக்கின்றனஒன்றுபொதுத்துறை நிறுவனங்களுக்கு லாபம் முக்கியமல்லசேவைதான் முக்கியம் என்ற தத்துவம்.இந்தத் தத்துவமே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றுபொதுத்துறை நிறுவனங்கள் என்பவை மக்கள் பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்கள்அவற்றில் லாபம் வந்தால்,அவை மக்களுக்குக் கிடைக்கும் லாபம்அந்தப் பணம் ஏதோ ஒரு வடிவில் மக்களுக்குத் திரும்பி வரும்சில ஆண்டுகளுக்கு முன் எல்..சி., குடிதண்ணீர்த் திட்டங்களுக்கு நிதி உதவியதைப்போலதனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஈட்ட வேண்டியதில்லை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் அந்தநிறுவனங்கள் தங்கள் வருமானத்தைக்கொண்டு தங்களது செலவுகளை எதிர் கொள்ளும் அளவிற்கு லாபமும் இல்லைநஷ்டமும் இல்லை என்ற நிலையிலாவது,காத்திரமாக இருக்க வேண்டுமல்லவாஅவை நஷ்டத்தை சந்திக்கின்றன அல்லது அந்தக் கடன்களை மக்கள் பணத்திலிருந்துதானே செலவிட நேரும்அதாவதுஅந்தச்சுமை மக்கள் மீதுதானே விழும்?
நாம் செலவிடுவது மக்கள் பணம் என்ற உணர்வு இல்லாமல், ‘ஊரான் வீட்டுப் பணம்’ என்ற நினைப்பில் ஊதாரித்தனமாக வாரி இறைப்பது மற்றொரு மனோபாவம்.
இந்த மனோபாவங்களில் சிக்குண்டதால்தான் நம் பொதுத் துறை நிறுவனங்கள் நலிந்தனஅதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் எதிர்கொள்கிறோம்.

மின் வாரியம்

ஐந்தாண்டுகளுக்கு
 முன்பு, 2005-06ல் மின் வாரியத்தின் நஷ்டம் 4,911 கோடி ரூபாய்இந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி அதன் நஷ்டம் 40,659 கோடிஅதாவது,ஐந்தாண்டுகளில் நஷ்டம் சுமார் பத்து மடங்குகளாக அதிகரித்திருக்கிறது.  இந்த நஷ்டம் எப்படி சமாளிக்கப்பட்டதுகடன் வாங்கித்தான். 2005-2006ல் மின் வாரியம்திருப்பிச் செலுத்த வேண்டிய கடனின் அளவு 9,300 கோடிஅதுவே இந்த ஆண்டு மார்ச்சில் 40,300 கோடிஇந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அது 53,000 கோடியைத்தாண்டிவிடும் என்கிறார் முதல்வர்.
தமிழக அரசு என்ற பெரிய அமைப்பின் கடனே ஒரு லட்சத்து ஆயிரம் கோடிதான்ஆனால்மின் வாரியம் என்ற ஒரு நிறுவனத்தின் கடன் மட்டும் 53 ஆயிரம் கோடிஎன்றால்அது எப்படி நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒருவேளை மின் சப்ளை என்பது லாபம் தராத தொழிலோதனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் இதற்கானவிடையைக் கண்டுபிடித்து விடலாம்.

"
கடந்த திமுக ஆட்சியில் ஏழு தனியார் மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுமாநிலத்தின் மின்சாரத் தேவையில் அந்தத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புவெறும் 9 சதவிகிதம்தான் (1150 மெகாவாட்). ஆனால்மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 35 சதவிகிதம் அந்தத் தனியார் நிறுவனங்களுக்குப் போகிறது.உதாரணமாகபிள்ளைப்பெருமாள்நல்லூரில் 335 மெகாவாட் திறன்கொண்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளதுஅவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டிற்கு 18.54ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. 335 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அந்நிறுவனத்தை நிர்மாணிக்க சுமார்  600 கோடி செலவாகி இருக்கும்ஆனால்,அதைவிட பல மடங்கு லாபத்தை அந்நிறுவனம் சம்பாதித்துவிட்டதுஎல்லா தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டனஎன்கிறார்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.விஜயன்.

தனியாருக்கு
 லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை அரசு நடத்தும்போது மட்டும் ஏன் நஷ்டம் வருகிறதுமேலே சொன்ன மனோபாவங்கள்தான் காரணம்.
இந்தச் சிக்கல் திடீரென ஒரு நாள் நள்ளிரவில் ஏற்பட்டதல்லதொடர்ந்து பல ஆண்டுகளாக மின் வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது என்பது அதன்அமைச்சர்கள்,அதிகாரிகள்ஏன் ஊழியர்களுக்குக் கூடத் தெரியும்.

"
மின்வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசின் சார்பில்வெள்ளையறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதுஅதில்முந்தைய திமுக ஆட்சி விட்டுச்சென்ற கடன் தொகை 3,359 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டதுஎனவேமின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவையுள்ளது என்றும் அதில் கூறப்பட்டிருந்ததுஆனால்அதன் பிறகுமின்வாரியத்தை கடனில் இருந்து மீட்பதற்கான எந்தவொருநடவடிக்கையும் எடுக்கவில்லைஅடுத்ததாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசும்மின்வாரியத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான எந்த நடவடிக்கையையும்எடுக்கவில்லைமின்சார வாரியம் மரணப்படுக்கையில் தள்ளப்பட்டதற்கான காரணம் இதுதான்என்கிறார்தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத்தலைவர் எஸ்.விஜயன்.
சரிமின்வாரியம் நஷ்டத்தைச் சந்திக்கிறது எனத் தெரிந்தும் அதைத் தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

அங்குதான்
 வருகிறது வாக்கு வங்கி அரசியல்மாதம் 600 யூனிட்களுக்குமேல் பயன்படுத்துவோருக்கு ஆகஸ்ட் 2010ல் 1 ரூபாய் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.ஆனால்அது தேர்தலைப் பாதிக்கும் எனப் பயந்துஅக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதுவாக்கு வங்கி அரசியல் மட்டுமல்லஇலவசங்களை முன் நிறுத்தி நடத்தப்படும்அரசியலும் ஒரு காரணம்!
விவசாயிகளுக்கு அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறதுமின்சாரம் என்பது காற்றைப்போல இயற்கையே இலவசமாகக் கொடுக்கும் பொருள் அல்லஏதோ ஒருஇடத்தில் அது உற்பத்தி செய்யப்படும் பொருள்எனவேஅதற்கு ஒரு செலவு இருக்கிறதுஅதை யாராவது ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்மின்சாரத்தைஇலவசமாகக் கொடுப்பது அரசின் முடிவு என்றால்அரசுதான் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நல்ல பெயரைசம்பாதிக்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தைஅதற்கான கட்டணத்தை மின்வாரியத்திற்கு செலுத்துவதில் மாநில அரசு காட்டுவது இல்லைஇலவச மின்சாரம்பெற்ற வகையில் இதுவரை சுமார் 5,600 கோடி ரூபாய் மின் வாரியத்திற்குத் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளதுமின் வாரியம் திவாலாகாமல் என்ன செய்யும்?

http://www.puthiyathalaimurai.com/images/stories/cover-table-250.gif 







http://www.puthiyathalaimurai.com/images/stories/cover-stry-tbl-250.gif 








http://www.puthiyathalaimurai.com/images/stories/cover-stry-table-250.gif 








ஆவின்

பத்தாண்டுகளுக்கு
 முன்பு லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக இருந்தது ஆவின். 2000ம் ஆண்டு அது 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதுஆனால்அதன் பின் அதுபடிப்படியாகச் சரிந்துஇன்று மரணப்படுக்கையில் இருக்கிறதுஇப்போது மாதா மாதம் அரசிடம் 16 லட்ச ரூபாய் மானியம் பெறும் நிறுவனமாக அது இருக்கிறது.

ஆவின் நிறுவனம் நலிந்ததற்குக் காரணம்ஊழல்’ என்ற ஒரு கருத்தை அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் சொல்கிறார்கள்சத்தான பால் கிடைக்கவேண்டும் என்றால்மாடுகளுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும்ஒரு லிட்டர் பாலுக்கு அரை கிலோ அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 300 ரூபாயாக இருந்தகால்நடைத் தீவனத்தின் விலை தற்போது 575 ரூபாய்பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 65 சதவிகிதம் தீவனத்திற்காக செலவிட வேண்டியுள்ளதுஎன்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.
இந்தத் தீவனப் பிரச்சினையைத் தீர்க்கமுன்பு ஆவின் நிறுவனமே கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்ததுசென்னை மாதவரம்மதுரைஆம்பூர் உள்ளிட்டஇடங்களில் ஆவின் தீவனம் உற்பத்தி செய்யப்பட்டதுதரமான மாட்டுத் தீவனமாக அது இருந்ததுபத்தாண்டுகளுக்கு முன்பு அதை ஆவின் நிர்வாகம் மூடிவிட்டது. "ஆவின் நிறுவன அதிகாரிகளில் பலர்தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்ஆவின் நிறுவனம் நலிவடைவதற்கு முக்கியக் காரணமேஅதுதான்ஆவின் மாட்டுத் தீவனத்தை மூடியதற்கும் அதுதான் காரணம்ஆவின் நிர்வாகத்தில் ஊழலைக் களைந்துநிர்வாகத்தை சீர்படுத்தினாலே லாபகரமானநிறுவனமாக ஆவினை மாற்ற முடியும்என்கிறார்ஆவின் நிறுவன ஊழியர் ஒருவர்.
இதன் வீழ்ச்சிக்கு வாக்கு வங்கி அரசியலும் காரணம். "15.02.2011 கணக்குப்படிஆவின் நிறுவனம் 359 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்ததுஆவின் நிறுவனத்தைப்பாதுகாக்க வேண்டும்பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி கடந்த பிப்ரவரியில் மாநில அளவில் போராட்டம்  நடத்தினோம்அன்றையமுதல்வர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதுலிட்டருக்கு 2.46 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதுஅதன் பிறகு ஆவினுக்கு மேலும் 100 கோடி ரூபாக்குநஷ்டம் ஏற்படும் நிலையை உருவாக்கிவிட்டனர்என்கிறார்தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முகமது அலி.
அப்போதே பால் விலையை கொஞ்சம் உயர்த்தி இருந்தால் மக்களுக்கு சுமை தெரிந்திருக்காதுஆனால்சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அப்போதைய திமுகஅரசு பால் விலையை உயர்த்தவில்லை.

http://www.puthiyathalaimurai.com/images/stories/cover---7.gif












போக்குவரத்துக் கழகங்கள்

இந்த
 ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படிஅரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றுமுதல்வர் கூறியுள்ளார்போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமைக்கு தமிழக முதல்வர் கூறியுள்ளது போலடீசல் விலை உயர்வும் முக்கியக் காரணம்.

"
டீசல் உயர்வு போக்குவரத்துக் கழகங்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மைஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இரண்டாவதுமுறையாகப் பொறுப்பேற்றது முதல்இதுவரையில் 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுலிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்வு என்றாலும்போக்குவரத்துக்கழகங்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறதுஎன்கிறார்தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் .பி.அன்பழகன்(தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 321 பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன).
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தபோதும் கூட மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காககடந்த 10 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லைகடைசியாக, 16.12.2001 அன்று பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
டீசல் விலை உயர்வு ஒரு காரணம்தான்ஆனால்அது மட்டுமே காரணம் அல்லதொலை நோக்கற்ற நிர்வாகமும் காரணம்உதாரணமாகஇருபது ஆண்டுகளுக்குமுன்பு வரையில்பேருந்துகளுக்கு பாடி கட்டுவதுஅவற்றைப் பராமரிப்பது உட்பட அனைத்துப் பணிகளையும் போக்குவரத்துக் கழகங்களே செய்தனநாகர்கோவில்,பொள்ளாச்சிதிருச்சிசென்னை உட்படப் பல இடங்களில் அதற்கான பணிமனைகள் இயங்கினபெயிண்ட் கூட சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டதுமுழுக்க முழுக்கப்போக்குவரத்துக் கழகங்கள் சொந்தக்காலில் நின்றனஆனால், 1990க்குப் பிறகு இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம்கொடுக்கப்பட்டதுஇதனால்போக்குவரத்துக் கழகங்களின் பணம் பெருமளவில் விரயமாகியுள்ளது.
இதை தவிர இலவசங்களை முன்னிறுத்திய அரசியலும் வாக்கு வங்கி அரசியலும் காரணங்கள்.

12
ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மாநில அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. 27 லட்சத்து 52 ஆயிரத்து பள்ளி மாணவர்கள்பயன்பெறுகின்றனர்ஆனால்இத்திட்டத்தின் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கும் மாநில அரசுஅதற்கான பணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்குஅளிப்பதில்லைஇந்த வகையில் 1989 முதல் சுமார் 1,500 கோடி ரூபாய் அரசு பாக்கி வைத்துள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையே செய்யாமல்சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறதுஒரு நபருக்கு மாதச் சம்பளம் சராசரியாக  10 ஆயிரம்இதன் மூலம் கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி வீணாகிறது.ஓராண்டுக்கு 24 கோடி ரூபாய் விரயமாகிறது என்றும் சொல்லப்படுகிறது.


இலவசங்கள்

பொதுத்துறை
 நிறுவனங்கள் இலவசங்களாலும் விரயத்தினாலும் நிதி நெருக்கடியைச் சந்தித்து மரணப் படுக்கையில் இருக்கும் நேரத்தில் கூட அரசுப் பணத்தைத் தங்கள்விளம்பரத்திற்காகச் செலவழிப்பதில் கூச்சமோதயக்கமோ காட்டுவது கிடையாது.
http://www.puthiyathalaimurai.com/images/stories/2.gifஉதாரணமாககோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்குச் செலவிடப்பட்ட தொகை 311 கோடி ரூபாய்தமிழைவளர்ப்பதுதான் நோக்கம் என்றால்அறிஞர்கள் அரங்குக்குள் கட்டுரைகள் வாசித்து அவற்றை ஆழமாக விவாதிக்கும்படிமாநாட்டை ஏற்பாடு செய்திருக்கலாம்அப்படிச் செய்திருந்தால்இதில் பத்தில் ஒரு பங்குச் செலவில் மாநாடுமுடிந்திருக்கும்ஆனால்இந்த மாநாட்டின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.
இன்னொரு உதாரணம்இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிஇதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 4,000 கோடிரூபாய்இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பங்கை ஆவினில் முதலீடு செய்திருந்தால்அதன் நஷ்டம் சரி செய்யப்பட்டு இன்றுஅது நிமிர்ந்து நிற்கும்இந்தப் பணத்தை போக்குவரத்துக் கழகத்திற்குச் செலவிட்டிருந்தால்அதற்கு ஏற்பட்ட 6,150 கோடிரூபாய் இழப்பில் 75 சதவீதம் ஈடுகட்டப்பட்டிருக்கும்.
நிதி நெருக்கடி நிலவிய நேரத்திலும் ‘அகலக் கால்’ வைக்கவும் ஆட்சியாளர்கள் தயங்கவில்லைபுதிய சட்டமன்றக் கட்டிடம்கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை மாத்திரம் 1,092 கோடி!
போட்டி அரசியல் நிலவுகிற தமிழகத்தில் இன்றைய ஆளும் கட்சியும் முந்தைய ஆளும் கட்சிக்குச் சற்றும்சளைக்கவில்லை.  இலவச அரிசிக்காக 4,500 கோடியும் விசிறிமிக்சிகிரைண்டருக்காக 1,250 கோடியும் ஒதுக்கியிருக்கிறது(முழுப்பட்டியலுக்குக் காண்கபெட்டிச் செய்தி).
ஏழைகள் இருக்கிற வரைக்கும் இலவசங்கள் இருக்கும் என வசனம் பேசுவது எளிதுஅடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்தஇலவசங்கள் என அவற்றை நியாயப்படுத்தவும் கூடச் செய்யலாம்ஆனால்எதை இலவசமாகக் கொடுப்பது என்பதைக்குறித்து ஆள்கிறவர்களுக்குத் தெளிவு வேண்டும்கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம்மருத்துவ வசதிகளைஇலவசமாகக் கொடுக்கலாம்அவைமாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதுகாலத்திற்குப் பின் உதவும்.சுருக்கமாகச் சொன்னால் கல்விமருத்துவ வசதி இலவசங்கள் ஒரு வகையான முதலீடுஆனால்,வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டியோமிக்சிகிரைண்டரோ முதலீடு அல்லஅவை லஞ்சம்.
உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லைஎல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டுஅந்தப்  பொருளைப் பெறுபவருக்குப் பதில்வேறு யாரோ கொடுக்கும்போதுஅதை இலவசம் என நாம் நினைத்துக் கொள்கிறோம்ஆனால்உண்மையில் அந்த யாரோ வேறு யாரும் இல்லைநாம்தான்!

- ஆ
.பழனியப்பன் உதவியுடன்  - மாலன்
Powered by Blogger.