மக்கள் விரும்புவதைத்தானே கொடுக்க முடியும் என மீடியாக்கள் சொல்கின்றன.

மக்கள் எதை விரும்ப விரும்ப வேண்டும் என்பதையும் கார்பரேட் நிறுவனங்களும், மீடியாக்களும் தீர்மானிக்கின்றன, தீர்மானிப்பதற்கான வேலையை  செய்தன.

இப்போது  மக்கள் பருக மது கேட்கிறார்கள்.
மது கொடுத்தே வளர்க்கப்பட்ட  குழந்தை வளர்ந்த பின் குடிப்பதற்கு இளனியா கேட்கும்.??
பொழுதுபோக்கு நிகழ்சிகளில் வன்முறையையும், ஆபாசத்தையும், மட்டமான ரசனையும் மக்கள் விரும்புகிறார்கள். (அதனால் தான் கொடுக்கிறோம் என சொல்லப்படுகிறது.)

இதில் யாரை குற்றவாளி என சொல்ல முடியும்.?


மக்களின் ரசனையை மோசமாக்கிய மீடியாக்களும், சினிமாக்களும், அதன் சூத்திரதாரிகளான  கார்பரேட் நிறுவனங்களுமா.?

அல்லது கண்டதையும்  ஏற்றுக்கொண்டு பின்பற்றும் மக்களா.?

மக்களை அழிவுப் பாதையை நோக்கி செல்வதைத்  தடுக்கவும், ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையின் வழியில் செல்வதற்கும் தூண்ட இயலாத, அதற்குண்டான பலம் இல்லாத  சமூகவியல் வல்லுனர்களா.?

அல்லது அதிகாரம், பலம் என எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசையா.?

யார் குற்றவாளி.?
Powered by Blogger.