அஷ்ஷைக்: எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி
என்னைச் சுடாதீர்கள்!, என்னைச் சுடாதீர்கள்! என்ற இறுதி வார்த்தையுடன் 42 வருடகால சர்வதிகாரியின் கதை முடிவுக்கு வந்தது.
நீதி, நேர்மை, பிரஜைகளின் மதிப்பு ஆகிய நல்ல பண்புகளால் அரபு மண் நிரம்பிக்காணப்பட்;ட காலம் மலைஏறி அநீதி, அடக்குமறை,சர்வதிகாரம் ஆகியவற்றால் நிரம்பிவழியும் பிரதேசங்களாக மாறியதால் ஆட்சியாளர்களை மக்கள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், மக்களை அநீதிக்குப் புறம்பாக ஆட்சி செய்யும் அரபு ஆட்சியாளர்களைக் கதிகலங்கச் செய்யும் மக்கள் புரட்சி துனிஸியாவில் ஆரம்பித்து எகிப்து, எமன், பஹ்ரைன், லிபியா , சிரியா,என ஆலவிருட்சமாகப் பரவியது.
கமால் அப்துல் நாஸிர், அன்வர் சதாத் போன்ற சர்வதிகாரிகளைத் தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் எகிப்தின் ஆட்சிக்கு வந்து யூத ஆட்சியை இரண்டு தசாப்தங்கள் நடத்திச் சென்ற யூதகர்ளின் நண்பன் முபாரகின் கதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து,
ஸியோனிஸ மொஸாட்டின் துணையுடன் சனூஸிய இயக்கத்தை1969-ம் ஆண்டு, வீழ்த்தி இராணுவப் புரட்சி மூலம் லிபியாவை நான்கு தசாப்தமாக ஆட்சி செய்து வந்த சரவதிகாரி கடாபியின் கதை (2011-10-19) அன்று முடிவுக்கு வந்தது.
இது அரபு மண்ணுக்கு மாத்திரமல்ல, சர்வதிகார ஆட்சியாளர்களின் கடைசிச் சரித்தரமாக என்றோ ஒருநாள் இவ்வாறு நடந்தேறும் என்பதை இந்த நிகழ்வுகள் ஆருடம் கூறுகின்றது. லிபிய மண் ஏற்கெனவே இருந்ததை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் சாத்தியங்கள் இருப்பதை நிகழ்கால ஆப்கான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. லிபிய மக்களை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
கடாஃபியின்வாழ்க்கைச் சுருக்கம்:
முழுப்பெயர்: முஅம்மர் முஹம்மத் அப்துஸ்ஸலாம் அபூமின்யார் அல்கத்தாஃபீ. கதாதிஃபா கோத்திரத்தில் பிறந்ததால் கத்தாஃபீ என்றுஅழைக்கப்பட்ட இவர், 1942ம் ஆண்டு ஜுன், ஏழாம் திகதி சர்த் மாகாணாத்தில் “ஜஹன்னம்” என்றழை க்கப்படுகின்ற கிராமத்தில் பிறந்தார், 1969-ம் ஆண்டு பன்காஸி மாகாணாத்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்துக் கொண்டிருந்த யூத மாணவன் ஒருவன் மூலம் தனது யூதத் தொடர்பை உயிற்பிக்கலானார். ஏனெனில் இவரது பாட்டி யூதப் பெண்ணாக இருந்தார், இவரது தாயும் அந்த வளர்ப்பில் கச்சிதமான வளர்க்கப்பட்டார், இதற்கு கிரிஸ்தவப் பிரிவினரின் உதவியும், பக்கபலமும் இருந்தது. அதனால் கடாபி இராணுவக்கல்லூரியில் இணைந்து படிப்பதை விரும்பினார்,யதர்களுடன் திரைமறைவில் நண்பனாக செயல்பட்டு வந்தகடாபிக்கு தல்அவீவ் நினைவு முத்திரையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடக்கத்தது. இந்த கடாபிக்கு இஸ்லாம் பற்றிய அறிவு அறவே கிடையாது.
முழுப்பெயர்: முஅம்மர் முஹம்மத் அப்துஸ்ஸலாம் அபூமின்யார் அல்கத்தாஃபீ. கதாதிஃபா கோத்திரத்தில் பிறந்ததால் கத்தாஃபீ என்றுஅழைக்கப்பட்ட இவர், 1942ம் ஆண்டு ஜுன், ஏழாம் திகதி சர்த் மாகாணாத்தில் “ஜஹன்னம்” என்றழை
1956ல் தனது ஆரம்பக் கல்வியை சர்த் நகரில் தொடர்ந்தார். பத்ஹிய்யா காலித், ஸபிய்யா பர்காஷ் ஆகிய இரு பெண்களை மணம் முடித்திருந்தார். இவர்களில் இவருக்கு ஏழு குழந்தைகள் ஒரு பெண்,மற்றவர் அனைவரும் ஆண்கள். லிபிய ராணுவத்தில் இணைந்துகடமையாற்றும் போதே ஆட்சியில் இருந்த சனூஸிய இயக்கத்தை வீழ்த்திட திட்டம் தீட்டினார். அதன் பயனாக 1964-ல் சுதந்திரப்படை என்ற பெயரில் இராணுவ சிப்பாய் அமைப்பை தோற்றுவித்தார். 1969ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி லிபியமக்கள் குடியரசு என்பதாக லிபியாவின் பெயரை மாற்றிக் கொண்டார்.
1975- 76 காலப் பகுதியில் அவர் எழுதிய “பசுமை நூல்” (Green Book) என்றபுத்தகத்தில் லிபியா எவ்வாறு கொண்டு செல்லப்படும் என்பதை விளக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரபு தேசிய வாதம் பேசிய எகிப்தில் முன்னாள் அதிபரான கமால் அப்துல் நாஸிருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி இருந்தார். இருந்தும் அது சாத்தியமற்றுப் போனது. பின்னர், அவர் ஆப்ரிக்க ஐக்கியத்திற்கு குரல்கொடுத்தார், தன்னை ஆப்ரிக்க முடிசூடா, மன்னாதிமன்னராக நினைத்து செயல்பட்டு வந்தார். இவரிடம் மார்கிஸ, மற்றும் சமவுடமைக் கொள்கைக்கு இடம் இருந்தது. பச்சை நிறத்தை நாட்டின்நிறமாகவும், பசுமை நூலை லிபியா அரசாங்கத்தின் யாப்பாகவும் கொள்கைப் பிரகடனம் செய்து செயல்பட்டு வந்தார். இவர் மேற்குலகுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.பயங்கரவாதிகளுக் கு (அமெரிக்க மொழியில்) சோரம் போகின்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது ஸதாம் ஹுஸைனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தார், மேற்குலகைக்கைகழுவி னார்.
1986-ம் ஆண்டு அnரிக்க விமானம் அவரது காரியாலயத்தில் குண்டு வீசிய போது கடாபி மயிரழையில் தப்பிப் பிழைத்தார். 1988-ம் ஆண்டு“பன்அமெரிக்கன்” என்ற விமானம் ஸ்கொட்லெண்டுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 259 பயணிகளும், 11 ஸ்கொட்லாண் வாசிகளும் மரணத்தை தழுவினர். இந்தக் தாக்குல் லிபியாவால் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனும், அமெரிக்காவும் கூட்டாக சந்தேகம் வெளியிட்டன. அதன் விளைவாக 1992ம் ஆண்டு பொருளாதாரத் தடைக்கு லிபியாஉட்படுத்தப்பட்டது. பொருளாதாரத் தடையால் நிலைகுலைந்து போன லிபியா தனது அணுஆயுதம் பற்றி முழுமையாக தகவலை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்ததுடன், பாகிஸ்தானிஅணு விஞ்சானியான அப்துல் கதீர்கானையும், இன்னும் சில இஸ்லாமிய நாடுகளையும் காட்டிக் கொடுத்து தனது அமெரிக்க எஜமானிடத்தில் நல்லவனாகவும் நடித்ததன் பயனாக 2003ம் ஆண்டுதனது பொருளாதராத்தடையை நீக்கிக் கொண்டது.
இஸ்லாத்திற்கு சகல வழிகளிலும் எதிரியாக செயல்பட்டு வந்த லிபியத் தலைவர் காடாபியின் அரசியல் வாழ்வுக்கு 2011-08-22 அன்று மக்கள் புரட்சியால் நிலைகுலைந்நதது. 20 11- 10- 19 அன்று அவரது வாழ்க்கை சரித்திரம் மூடப்பட்டது.
சடலமாகக் காணப்படும்சர்வதிகாரி
கடாபி
கடாஃபி குர்ஆனையும், சுன்னாவையும் நிராகரித்து, ஹிஜாபைக் கிண்டல் செய்து, புனித கஃபாவை விமர்சனம் செய்து பசுமை நூலை எழுதி அகமுல் செய்ததை இன்றும் அறியாத முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் அவன் புகழ்பாடி காலம் கழிக்கின்றனர் என்றால் இதைவிடவுமா அறியாமை வேண்டுலம் !!! அதனால் இங்கு அவனது தீய பகுதிகள் ஆதாரத்துடன் தரப்படுகின்றது.
கடாஃபி குர்ஆனையும், சுன்னாவையும் நிராகரித்து, ஹிஜாபைக் கிண்டல் செய்து, புனித கஃபாவை விமர்சனம் செய்து பசுமை நூலை எழுதி அகமுல் செய்ததை இன்றும் அறியாத முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் அவன் புகழ்பாடி காலம் கழிக்கின்றனர் என்றால் இதைவிடவுமா அறியாமை வேண்டுலம் !!! அதனால் இங்கு அவனது தீய பகுதிகள் ஆதாரத்துடன் தரப்படுகின்றது.
கடாஃபி பற்றி முஸ்லிம் அறிஞர்கள் குழுவின் பார்வை
عرف بفضيحة أوراق الموساد المفقودة أو ما سمى Taxi Paper وهي مستندات إسرائيلية سرية تكشف حقيقة القذافي وانقلاب سبتمبر1969 وعلاقته بالموساد وتنص المستندات حرفيا
فضيحة أوراق الموساد المفقودة
فضيحة أوراق الموساد المفقودة
மொசாட்டின் தொலைந்து போன கேவலமான ஆவணங்கள், வுயஒi pயிநச என்று அடையாளப்படுத்தப்படுகின் றது. இது 1969-ம் ஆண்டு மொசாட்டின் துணையுடன் கடாபி இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் எவ்வாறு ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கும் இரகசிய ஆவணமாகும்.
உலக முஸ்லிம் அமைப்பின் நிறைவேற்றுக் குழு ஹிஜ்ரி: 1400துல்ஹஜ்-பிறை: 11- 12 கி.பி. 1980-10-20 அன்று திங்கள் மாலை மினாவில் அமைந்துள்ள ராபிதாவின் தலைமைக்கட்டத்தில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் உலகில் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்றனர். இஸ்லாத்திற்கு மாற்றமாக கடாஃபி பேசியதைக் கூறியவைகள வைத்து கடாபிக்கு எதிரான பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். அவை எதற்காக என்பது கலந்து கொண்ட அறிஞர்களின் பெயர்களுடன்பின்வருமாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது
அல்குர்ஆன் ஒரு சமூகத்திற்கான மார்க்க போதனைகள் அடங்கிய நூல் மாத்திரம்தான், நபியின் வழிமுறையான ஸுன்னாவும் அவசியமற்றது என்று சுன்னாவை நிராகரித்து கடாஃபி 1978-ம் ஆண்டு திரிப்போலியில் நடை பெற்ற ஒரு மீலாத் தின உரையில்
இரண்டவாது மூலாதரமான சுன்னாவை நிராகரித்ததையும்,குர்ஆனில் قل என்ற சொல்லை நீக்க வேண்டும் எனக் கூறியதையும்,இத்தாலியப் பெண் பத்திரிக்கையாளர் பாலைவனத்தூதரே! என்றுகடாபியை அழைத்த போது “ஆடு மேய்த்த காரணத்தால் தானும் நபிதான் என்று நபித்துவத்தை வாதிட்டதையும் உறுதி செய்யும் மற்றொரு இஸ்லாமிய அறிஞர்கள் சபையில் வாக்குமூலம்.
பெண்கள் தமது இயல்பான அழகை மறைக்க வேண்டியதில்லை என ஹிஜாபை நிராகரித்தது பற்றி கடாபியின் கூற்றை உறுதி செய்யும் அறிஞர்களின் வரிகள்