அதிகப்படியான பேச்சை குறைத்துக் கொண்டு, நாம் பேசுவது சிலது என்றாலும் அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல்வது நலம்.

எந்த ஒரு செயலும் கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும் என்ற நம் அதீத ஆசையோடு ,
கூடவே அதன் நடைமுறைச் சிக்கலைக் குறித்தும் யோசிக்க வேண்டும்.

நாம் வாழ்வது மனிதர்களோடு..
பூமியில் வாழும் நாம், பூமிக்கு கீழும், வானத்திற்கு மேலும் வாழும் ஜீவராசிகளை போல சக மனிதர்களை கையாண்டால் நடைமுறைக்கு ஆகாது.

ஒரு நல்ல விசயமே என்றாலும் கூட , எதார்த்தத்தில் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில் நமக்கு பொறுமையும், மனோ நிலையை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லையென்றால் நாம் சக மனிதர்களின் உள்ளங்களை கிழித்து விட நேரிடலாம்.
Powered by Blogger.