பகிர்ந்துண்டு வாழ எனக்கொன்றும் தயக்கமில்லை..
எறும்புகள் கூட உணவருந்தும்,
என்னோடு என் இலையில்..!
எனது உணவுகள்..
கலப்பான சூழலில்,
காற்றோட்டமான வெளியில்,
பெரும்பாலும் கூட நிறைய காக்கைகளோடு.!
மனதில் தான் கொஞ்சம் வலிகள்..
அடுத்த உணவு எங்கிருக்குமோ என்கிற தேடலோடு.!
-Abbas Al Azadi